(சென்னை, தமிழ்நாடு)
இரண்டு மாதங்களுக்கும் மேலாக, ஐரோப்பிய நாடுகளில் பல்வேறு மனித உரிமை கூட்டங்களில் கலந்து கொண்டு, இந்தியாவுக்கு திரும்பும்போது பெங்களூர் விமான நிலையத்தில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டு, தமிழக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். சைதாப்பேட்டை நீதிமன்றம் சிறையில் வைத்திருக்க முகாந்திரம் இல்லையெனக் கூறி வழக்கை முடிவுறுத்தியது. தமிழக காவல்துறையும் விசாரணை முடித்து விடுவிடுப்பதாக, எழுத்து மூலம் அறிவித்தப்பின், மீண்டும் கைது செய்துள்ளது. 2017இல் சிறையில் இருந்து வெளியே வந்தவுடன், தனது இயக்கத்தவர்களோடு ஒன்றாக சென்று, சென்னை ராயப்பேட்டையில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்ததைத் தடை மீறி ஊர்வலம் என வழக்கு பதிவுசெய்து வைத்திருந்திருக்கிறது தமிழகக் காவல்துறை.