ஒக். 19 21:49
(மன்னார், ஈழம்)
மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச செயலாளர் பக்கச்சார்பாக செயற்படுவதுடன் ஒரு சாராருக்கு அநீதி இழைக்கப்படுவதாகவும், இது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தி பிரதேச மக்கள் மேற்கொண்ட கண்டன ஆர்ப்பாட்டத்தை அடுத்து, பிரதேச செயலாளர் சுப்பிரமணியம் வசந்தகுமாருக்கு எதிராக உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு, மன்னார் அரச அதிபர் கிறிஸ்தோபர் அன்ரன் மோகன்ராஜ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார். முசலி பிரதேச செயலாளருக்கு எதிராக மாவட்ட அரசாங்க அதிபருக்கு ஏற்கனவே பல முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்ட நிலையில், இதுவரை அது குறித்து எவ்வித விசாரணையும் நடத்தப்படவில்லை எனத் தெரிவித்து கடந்த 15 ஆம் திகதி திங்கட்கிழமை மன்னார் நகரில் பாரிய கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை முசலி மக்கள் மேற்கொண்டனர்.