நிரல்
ஒக். 20 22:51

மாவீரர் துயிலுமில்ல சிரமதானப் பணிகள் ஆரம்பம் - முள்ளியவளை துயிலுமில்லத்தில் சிரமதானம்

ஈழத்தமிழ் மக்களது விடுதலைக்காக தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களது நினைவேந்தல் எதிர்வரும் கார்த்திகை மாதம் இடம்பெறவுள்ள நிலையில் இதனை முன்னிட்டு மாவீரர்களது வித்துடல்கள் புதைக்கப்பட்ட துயிலுமில்லங்களைத் துப்புரவு செய்யும் பணிகள் தமிழர் தாயகத்தில் ஆரம்பமாகியுள்ளன. இன அழிப்பு போரின் போது 2009 ஆம் ஆண்டு அப்போதிருந்த இலங்கையின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான இலங்கை இராணுவத்தினரால் அழிக்கப்பட்ட துயிலுமில்லங்கள் தற்போது புதர்மண்டிக் காணப்படுகின்றன. இதனால் முல்லைத்தீவு - முள்ளியவளை, மாவீரர் துயிலுமில்ல காணியில் துப்புரவுப் பணிகள் இன்று சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டன.
ஒக். 19 23:00

சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலலராஜனின் 18 ஆவது ஆண்டு நினைவேந்தல்

ஈழத்தமிழ் மக்களது இன்னல்களை பேனாமுனையால் வெளியுலகிற்கு தெரியப்படுத்திய துணிச்சலான ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 18 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு கிழக்கில் அனுட்டிக்கப்பட்டது. பேனா முனையால் மக்களின் குரலாக எதிரொலித்த நிமலராஜனது நினைவேந்தல் யாழ் ஊடக அமையம் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் மற்றும் மட்டக்களப்பு காந்தி பூங்காவிலும் இடம்பெற்றது. யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மாநகர மைதானத்திற்கு முன்பாக அமைந்துள்ள ஊடகவியலாளர் நினைவுத்தூபியில் இன்று பிற்பகல் நினைவுத் தூபிக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஒக். 19 21:49

மன்னார் - முசலி பிரதேச செயலாளருக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம்?

(மன்னார், ஈழம்) மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச செயலாளர் பக்கச்சார்பாக செயற்படுவதுடன் ஒரு சாராருக்கு அநீதி இழைக்கப்படுவதாகவும், இது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தி பிரதேச மக்கள் மேற்கொண்ட கண்டன ஆர்ப்பாட்டத்தை அடுத்து, பிரதேச செயலாளர் சுப்பிரமணியம் வசந்தகுமாருக்கு எதிராக உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு, மன்னார் அரச அதிபர் கிறிஸ்தோபர் அன்ரன் மோகன்ராஜ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார். முசலி பிரதேச செயலாளருக்கு எதிராக மாவட்ட அரசாங்க அதிபருக்கு ஏற்கனவே பல முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்ட நிலையில், இதுவரை அது குறித்து எவ்வித விசாரணையும் நடத்தப்படவில்லை எனத் தெரிவித்து கடந்த 15 ஆம் திகதி திங்கட்கிழமை மன்னார் நகரில் பாரிய கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை முசலி மக்கள் மேற்கொண்டனர்.
ஒக். 18 22:30

பதுளையில் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு வலியுறுத்தி கையெழுத்துப் போராட்டம்

(மலையகம்) மலையக தோட்டத் தொழிலாளர்கள் தமது வேதனத்தை அதிகரித்துத் தருமாறு வலியுறுத்தி பல வழிகளிலும் கண்டனப் போராட்டத்தை முன்னெடுத்துவரும் நிலையில், பதுளை மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கான ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு வலியுறுத்தி கையெழுத்துப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பதுளை மாவட்ட பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையுடன் கூடியதாக நூலகம், ஆய்வுகூடம் மற்றும் கட்டடங்களுக்கான நிதியை ஒதுக்கீடு செய்யுமாறும் வலியுறுத்தி இன்றைய தினம் பதுளை நகரில் கையெழுத்து திரட்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஒக். 18 21:52

பூந்தோட்டம் செல்லும் பிரதான வீதியைப் பயன்படுத்துவதற்கு அச்சமாக உள்ளதாக மக்கள் விசனம்

(வவுனியா, ஈழம்) இலங்கையில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் நகரை அண்டிய பகுதிகளோடு முடிவடைந்து விடுவதால் கிராமப்புற மக்கள் அடிப்படை வசதிகள் கூட இன்றி அல்லலுறுவதாக வவுனியா - குடியிருப்பு பகுதியிலிருந்து பூந்தோட்டம் செல்லும் பிரதான வீதியைப் பயன்படுத்தும் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். குடியிருப்பு பகுதியிலிருந்து பூந்தோட்டம் செல்லும் பிரதான வீதி நீண்ட காலமாக புனரமைக்கப்படாத காரணத்தால் பாடசாலை மாணவர்கள், முச்சக்கரவண்டிகள், துவிச்சக்கரவண்டியில் பயணம் மேற்கொள்பவர்கள் உட்பட அப்பகுதி வாழ் மக்கள் அனைவரும் கடும் நெருக்கடிகளுக்கு ஆளாகுவதுடன் பாடசாலை மாணவர்கள் அடிக்கடி விபத்துக்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஒக். 18 09:02

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு மாதாந்தம் ஆறாயிரம் ரூபா?

(யாழ்ப்பாணம், ஈழம் ) வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளோரின் உறவினர்களுக்கான இழப்பீட்டுத் தொகையாக மாதாந்தம் ஆறாயிரம் ரூபா வழங்குமாறு மைத்திரி - ரணில் தலைமையிலான இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்திடம் தாம் பரிந்துரைத்துள்ளதாக இலங்கை அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார். எனினும் இந்த ஆறாயிரம் ரூபா கொடுப்பனவை அரசாங்கம் அங்கீகரித்துள்ளமையானது 1 வருடத்துக்கும் மேலாக தங்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் தேடுதல் போராட்டத்தை மழுங்கடிக்கச் செய்யும் முயற்றி என முல்லைத்தீவைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
ஒக். 17 20:04

தமிழ்த் தரப்பினால் உருவாக்கப்படவுள்ள புதிய கட்சிகள் பூகோள அரசியலுக்கு ஏற்ப செயற்படுமா?

(கிளிநொச்சி, ஈழம்) பூகோள அரசியல் தாக்கத்தினால் மைத்திரி - ரணில் அரசாங்கத்திற்குள் மோதல்கள் அல்லது முரண்பாடுகள் போன்ற சூழல் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்த்தரப்பு எந்தவிதமான அரசியல் தயாரிப்புகளும் இல்லாமல் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர். இந்த நிலையில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான மாற்று அரசியல் அணியொன்றை விரைவில் உருவாக்குவோம் என்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். வவுனியா - சிவபுரத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இந்தக் கருத்தை தெரிவித்தார். வடக்கு- கிழக்கு தமிழர் தாயகத்தை உள்ளடக்கிய திருகோணமலை, முல்லைத்தீவுக் கடற் பிரதேசங்களில் அமெரிக்கா எண்ணெய் வள ஆய்வில் ஈடுபட்டு வருகின்றது.
ஒக். 17 15:03

இலங்கை மீதான வல்லரசுகளின் ஆதிக்கம், கொழும்பு அரசியலில் முரண்பாடுகளை உருவாக்கும் பூகோள அரசியல்

(மன்னார், ஈழம்) இந்தியாவின் புலனாய்வுப் பிரிவான றோ தன்னைக் கொலை செய்வதற்கு திட்டமிட்டுள்ளது என்றும் இந்த சதித் திட்டம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை எனவும் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். நேற்றுச் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மைத்திரிபால சிறிசேன இவ்வாறு கூறியுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய ஊடகவியலாளர்கள் தொவித்துள்ளனர். ஆனால் மைத்திரிபால சிறிசேன அவ்வாறு கூறவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு கொழும்பில் இன்று புதன்கிழமை இடம்பெற்றது.
ஒக். 16 10:17

காஞ்சூரமோட்டையில் குடியேறும் மக்களுக்கு கொலை அச்சுறுத்தல்- சிவசக்தி ஆனந்தன் குற்றச்சாட்டு

வவுனியா- காஞ்சூரமோட்டை பகுதியில் குடியேறும் மக்களுக்கும், மக்களது மீள்குடியேற்றம் தொடர்பில் நடவடிக்கை எடுத்துவரும் அதிகாரிகளுக்கும் இல்ங்கை ஜனாதிபதியின் இணைப்பாளர் ஒருவர் கொலை அச்சுறுத்தல் விடுத்து வருவதாக, இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். அண்மையில் இடம்பெற்ற வவுனியா வடக்குப் பிரதேச செயலக அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின்போதே, சிவசக்தி ஆனந்தன் பகிரங்கமாக இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். போர் காரணமாக இடம்பெயர்ந்து இதுவரை தமது சொந்த இடங்களில் மீள்குடியேறாதுள்ள மக்கள் தமது சொந்த இடங்களில் மீள்குடியேறும் போது, வனவளத் திணைக்களம் குறித்த காணிகள் தமக்கு உரியவை எனத் தெரிவித்து காணி உரிமையாளர்களான மக்களுக்கு தொடர்ச்சியாக இன்னல்களை கொடுத்து வருவதாக தெரிவித்தார்.
ஒக். 16 05:15

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக மைத்திரி - ரணில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை

(மட்டக்களப்பு, ஈழம்) வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய பிரச்சினையைத் தீர்ப்பதற்காக மைத்திரி - ரணில் அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோரைக் கண்டறியும் அலுவலகத்தின் செயற்பாடுகள் மந்தகதியில் இடம்பெறுவதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்க உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இழப்பீடுகளும், நிவாரணங்களும் வழங்கப்பட வேண்டியது அவசியமானதாக இருந்தபேபாதும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே தமது நோக்கம் என்றும் காணாமல் போன உறவினர் ஒருவரின் சகோதரி ச.சங்கீத்தா தெரிவித்துள்ளார்.